Date:

பொதியில் துப்பாக்கி சாதனங்கள் மீட்பு – விமான நிலையத்தில் பரபரப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஷ்ய தம்பதியரின் பயணப் பொதியில் துப்பாக்கி போன்ற இரண்டு சாதனங்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள் ரஷ்யா செல்வதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள்,33 வயதான இந்த ரஷ்ய பிரஜை, அவரது 26 வயதுடைய ரஷ்ய மனைவி மற்றும் 09 வயதான மகன் ஆகியோர்  ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தி்றகு வருகைத்தந்தனர்.

கொழும்பு-05 பகுதியில் வசிக்கும் இவர்கள் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் பிரவேசித்த போது, ​​விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட ஸ்கேன் சோதனையில் அவர்களின் பயணப் பொதிகளில் கைத்துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

 

பின்னர் விமான நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று குறித்த இடத்திற்கு வந்து ரஷ்ய பிரஜைகளை கைது செய்துள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த கைத்துப்பாக்கிகளில் தோட்டாக்களை வெளியிடும் பகுதி இல்லை எனவும், ஆனால் தோட்டாக்கள் செல்லும் குழாய் இரும்பினால் செய்யப்பட்டமை சந்தேகத்திற்குரியது. அந்தவகையில், இந்தக் கைத்துப்பாக்கிகளை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு களப் படைத் தலைமையகத்தில் சமர்ப்பிக்க கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 

அத்துடன், இந்தக் கைத்துப்பாக்கிகள் பொம்மைகளா இல்லையா என்ற தீர்மானத்தின் அடிப்படையில் ரஷ்ய தம்பதிகள் தொடர்பில் மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373