தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஎன்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு…
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் கேகாலை – 153, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி – 150, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, அம்பாறை, புத்தளம் – 148, நுவரெலியா, திருகோணமலை – 147, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு – 145 ,கேகாலை 144 ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுபுள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.