Date:

புணானை விபத்தில் 4 மாத குழந்தையும் மரணம் (தற்போதைய நிலவரம்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (24) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் – சிலாபம் பகுதியில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வேனும் கல்முனை பகுதியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த பஸ் வண்டியும் நேருக்குநேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி வைத்தியசாலையில் வைத்தியராக கடமை புரியும் 30 வயதுடைய வைத்தியர் பாத்திமா முப்லிஹா என்பவர் தனது குடும்பத்துடன் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மகப்பேற்று விடுமுறையில் நின்ற வைத்தியர் தனது சொந்த ஊரான புத்தளம் – சிலாபத்தில் இருந்து கடமையினை பொறுப்பேற்க காத்தான்குடி வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், வைத்தியரின் நான்கு மாத ஆண் குழந்தை மஹ்தி கான் மற்றும் வைத்தியரின் மாமாவான 74 வயதுடைய  ஏ.எம்.எம்.மவூசூப் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இவ் விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர், அவரது தந்தை உட்பட ஐந்து பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நான்கு பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியரின் ஒன்றரை வயது மகள் சிகிச்சையின் பின்னர் உறவினர்ககளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்தில் மரணமடைந்த இருவரின் உடல்களும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மலையக மக்களுக்கு உரிமை இல்லை என யாரும் கூற முடியாது

  அரசியல் செய்யும் உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் என்பவற்றை நாம் மதிக்கின்றோம்....

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

உயிர்த்த ஞாயிறு தினமான இன்று (21) ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள...

பொலிஸ் வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய ஆசிரியர்; எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

தனியார் நிகழ்விற்காக பொலிஸ் வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய 05 ஆம் வகுப்பு...

நாட்டில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி..!

உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர்....

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373