Date:

BREAKING: நானுஓயா விபத்து – விமானத்தை அனுப்பிய ஜனாதிபதி ரணில் (photos)

நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், தேவையேற்படின் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முழுமையான செய்தி –

நானுஓயா – ரதெல்ல  வீதியில் பஸ்  ஒன்றும் வேன் மற்றும் ஆட்டோ ஆகியன விபத்துக்குள்ளானதில் 7 பேர்  உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த மாணவர்களில் காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

விபத்தில் உயிரிழந்தவர்கள்  6 பேர்  வேனில் பயணித்தவர்கள் என்றும் மற்றொருவர் ஆட்டோ சாரதி  எனவும் பிந்திய தவகல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு தேர்ஸ்டன் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று வருடாந்த கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தற்போது காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர சேனவிரத்ன தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...