Date:

மாணவியின் கொலை விவகாரம் : மாணவன் களனி கங்கையில் குதித்த முயற்சி, பொலிஸார் விடுக்கும் முக்கிய கோரிக்கை

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன் தினம் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, இளைஞர் – யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் பொலிஸாரின் விசாரணையின் போது காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயத்தில் தான் காதலியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இளைஞன் களனி கங்கையில் குதித்து தற்கொலை செய்துக் கொள்வதற்கு 2 முறை முயற்சித்துள்ளார். பின்னரே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது அந்த வயதில் உள்ள இளைஞர் யுவதிகள் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படும் ஒரு போக்கை இந்த நாட்களில் காண முடிகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல்...

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்...

கிளிநொச்சி மண்ணின் வரலாற்றுச் சாதனை

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, கணிதப் பிரிவில் 2.9400 Z-Score...