கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன் தினம் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை, இளைஞர் – யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் பொலிஸாரின் விசாரணையின் போது காதலி தன்னை விட்டு பிரிந்துவிடுவாளோ என்ற பயத்தில் தான் காதலியை கொன்றதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த இளைஞன் களனி கங்கையில் குதித்து தற்கொலை செய்துக் கொள்வதற்கு 2 முறை முயற்சித்துள்ளார். பின்னரே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் அல்லது அந்த வயதில் உள்ள இளைஞர் யுவதிகள் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படும் ஒரு போக்கை இந்த நாட்களில் காண முடிகின்றது.