எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட 30 ரயில் பயணங்களில் பிரதான பாதையில் 18 ரயில் பயணங்களும், கடலோரப் பாதையில் 8 ரயில் பயணங்களும், புத்தளம் மற்றும் களனிவெளி மார்க்கத்தில் தலா இரண்டு ரயில்களும் அடங்கும்.
மேலும் ரயில்வே பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் செலவுகளை குறைக்கும் வகையில், அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லாத ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.