Date:

ஊதிய வரி தொடர்பில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்

அரச மற்றும் அரசு சார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஊதிய வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  நிதியமைச்சு திங்கட்கிழமை (09) தெரிவித்தது.

இது தொடர்பான சுற்றறிக்கை இந்த வாரத்துக்குள் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அளவைத் தாண்டி வருமானம் ஈட்டும் அரச மற்றும் அரசு சார் நிறுவனங்களின் ஊழியர்களுக்காக வரி அறிமுகப்படுத்த ப்பட்டதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், நிறுவனங்களின் நிதி வரி செலுத்துவதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

இதன் மூலம் அரச மற்றும் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு நிறுவனங்களின் நிதியின் ஊடாக வரி செலுத்துவதை தடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...