சீனாவில் பரவிவரும் கொரோனா திரிபு இலங்கையில் பல மாதங்களாக காணப்படுகின்றது என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் நீலிக மாலவிகே அவருடைய உத்தியோகபூர்வ டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் பெருமளவு மக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா திரிபுகள் இலங்கையிலும் உலகிலும் பல மாதங்களாக காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து கிடைத்த தரவுகளை ஆராய்ந்தவேளை இது உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.