இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது எப்போதும் சிரமமான காரியம். எனினும் எங்களிடமும் சிறந்த அணி இருக்கிறது. எனவே, இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட எதிர்பார்ப்பதுடன் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள இந்தியாவுடான தொடர்களைப் பயன்படுத்துவோம் என இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டி மும்பை வான்கடே விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (03) இரவு நடைபெறவுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை தசுன் ஷானக்க குறிப்பிட்டார்.
இலங்கையின் போராட்ட குணத்தைப் பாராட்டிப் பேசிய இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் , இலங்கை அணி பரபரப்பைத் தோற்றுவிக்கும் வகையில் விளையாடும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இதேவேளை, ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கைக்கு பதிலடி கொடுப்பதே தமது அணியின் பிரதான நோக்கம் என ஹார்திக் பாண்டியா தெரிவித்தார்.
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ அல்லது அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார.
இந்தியா: இஷான் கிஷான், ருத்துராஜ் கய்க்வாட், சூரியகுமார் யாதவ், சஞ்சு செம்சன், ஹார்திக் பாண்டியா (தலைவர்), தீப்பன் ஹூடா, வொஷிங்டன் சுந்தர், ஹர்ஷால் பட்டேல், அர்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக், யுஸ்வேந்த்ர சஹால்.