Date:

முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்…

பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படாவிட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிடும் எனவும், நாட்டில் கேள்விக்கு ஏற்ற அளவில் முட்டை நிரம்பல் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது முட்டையின் விலை 60 முதல் 70 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், இந்தியா அல்லது பாகிஸ்தானிடமிருந்து முட்டை இறக்குமதி செய்தால் ஒரு முட்டை 30 முதல் 32 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் முட்டைக்கு கறுப்புச் சந்தை வர்த்தகம் நிலவி வருவதாகவும் இதனை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் என்.கே. ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை

இலங்கை போக்குவரத்து சபையின் மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்துவதற்கு விரைவாக...

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த: கல்முனையில் எரிபொருள் ‘கியூ’

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற...

ஈரான் – இஸ்ரேல் மோதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்துள்ள தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில்...

தாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத்...