Date:

பெண்ணின் சடலத்தை தோண்டி தலையை வெட்டி எடுத்துச் சென்ற நபர்கள்

தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 80 வயதுடைய பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர், சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

தென்னகோன்புர பிரதேசத்தில் வசித்து வந்த 80 வயதான இந்த பெண் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சடலம் புதைக்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர்   உயிரிழந்தவரின் மகளுக்கு  தெரிவித்ததனையடுத்து அவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து  கலேவெல பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபையில் பெரும் கூச்சல்: சபை அதிரடியாக ஒத்திவைப்பு

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்மொழியவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித்...

கொழும்பின் 26ஆவது மேயராக பல்த்தசார் பதவியேற்றார்

கொழும்பு மாநகர சபையின் (CMC) 26ஆவது மேயராக தேசிய மக்கள் சக்தியின்...

இன்று 3.30க்கு அவசர விவாதம்

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து இன்று புதன்கிழமை (18) பிற்பகல் 3.30 மணிக்கு...

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக்...