ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி விடைத்தாள்கள் பரீட்சை நடத்தப்பட்டு, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையினால், எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பரீட்சை கடமைக்குச் செல்லும் ஊழியர்களுக்கான அறிவுறுத்தல் இடம்பெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.