குஜராத்தில் கலவரம் ஈடுப்பட்டவர்களுக்கு 2002ஆம் ஆண்டு பாஜகவால் பாடம் கற்பிக்கப்பட்டது, அவர்கள் இதுவரை தலை துக்கவிடாமல் தனது கட்சி “நிரந்தர அமைதியைக் கொண்டுவந்தது” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் நிறைந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து, குஜராத் மாநிலத்தின் சில பகுதிகளில் பாரிய வன்முறைகள் வெடித்தது.
கரசேவகர்கள் என்பது சீக்கிய சமயம் வலியுறுத்தும் முக்கிய அறங்களில் ஒன்றான தன்னலமற்ற சமுதாயத் தொண்டாகும்.
குறித்த மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது குஜராத்தில் பல்வேறு பிரிவுகளுக்கிடையில் கலவரம் அதிகமாக இருந்தது. நீங்கள் சத்தமாக சொல்லுங்கள் அவ்வாறு இருந்ததா? இல்லையா? என்று, 2002ஆண்டு நரேந்திர மோடி கலவரகரரர்களுக்கு நல்ல பாடம் ஒன்றை கற்பித்தார். அதன் பின்னர் அவர்கள் குஜராத்தை விட்டு வெளியேறினர். அகவே குஜராத்தில் பாஜக அமைதியை நிலைநாட்டியுள்ளது.
காங்கிரஸ் கலவரத்தைத் தூண்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அதனால்தான் பல்வேறு கலவரம் நடந்தது. குஜராத்தில் உள்ள பாஜக அரசு, கலவரக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் நிரந்தர அமைதியை நிலைநாட்டியுள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, குறித்த கருத்துக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ட்விட்டரில் மத்திய அமைச்சரின் கருத்துக்கு கடுமையாக விமர்சித்தார். “அமித் ஷாவின் கைகளில் அரபிய வாசனை திரவியங்களால் பூசப்பட்டதால் அவருடைய கைகள் அழகாகும்” என அந்த ட்விட்டர் பதிவில் பதிவிட்டிருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றது. அக்கட்சி கடந்த இரண்டு தசாப்தங்களாக மாநிலத்தில் ஆட்சி செய்துவருகின்றது.
இந்நிலையில், பிஜேபி யின் அரசியல் எதிர்கட்சிகளாக உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸும் – 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே, இந்த மாநிலத்தில் காவி கட்சியை நீக்கிவிட்டு, தங்கள் அரசாங்கத்தை நிறுவ முயல்கின்றன.
Source – BJP taught rioters lesson in 2002, brought permanent peace to Gujarat: Amit Shah – India Today