Date:

மின் கட்டணம் அலகு ஒன்றுக்கு 46 ரூபா வரை அதிகரிப்பு

மின் கட்டண அதிகரிப்பு ஜனவரி 2023 இல் தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான விரிவான அறிக்கையொன்று அமைச்சரவைக்கு கையளிக்கப்படும் என்றார்.

கட்டண உயர்வு அலகு ஒன்றுக்கு 45 – 46 ரூபாவாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே கட்டண உயர்வு 56.90 ஆக அமையும் என அவர் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,

“அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில், அநேகமாக 2023 ஜனவரி 2ஆம் திகதி, மின்கட்டண உயர்வு ஏன் தேவைப்படுகிறது, எந்த விதத்தில் அதிகரிக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான அறிக்கை மற்றும் பிற அத்தியாவசியத் தகவல்கள் சமர்ப்பிக்கப்படும். மேலும் 2023 ஜனவரியில் விலை திருத்தம் கண்டிப்பாக நடைபெறும்” எனவும் அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாதாள உலகக் குழுக்களினால் உயிராபத்து: விசேட பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர்

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதானல் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு...

இளம் காதலி பரிதாபம் ;கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில்…

கொழும்பு, கோஹிலவத்தை பகுதியில் களனி ஆற்றில் 9விழுந்து ஒரு பெண் உயிரிழந்துள்ளார். கோஹிலவத்தை...

துப்பாக்கிகளை கோரிய 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள்...

ரஜரட்ட பல்கலை பேராசிரியர்களின் வேலைநிறுத்தம் தீவிரம்

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற...