புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் அம்பன்பொல பகுதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் ஒருவர் காட்டுப்பகுதியில் அந்த சிறுமியை விட்டு விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பன்பொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சிறுமி, அம்பன்பொல மத்திய கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமி புலமைப்பரிசில் பரீட்சை முடிந்ததும், சிறிய லொறியில் தனது நண்பர்களுடன் அமுனுகம சந்திக்கு சென்றுள்ளார்.
அதன்பிறகு, வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார்.
எனினும், மோட்டார் சைக்கிள் வீட்டுக்குச் செல்லாம் வேறு வழியில் சென்றுள்ளது.
வேறு வழியில் செல்வதை அறிந்த சிறுமி , தன்னை கடத்துவதற்கு குறித்த நபர் முயற்சிப்பதை சிறுமி அறிந்துள்ளார். “கத்தினால் கொன்றுவிடுவேன்” என மிரட்டிய நபர் காட்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிது தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, ஞாயிற்றுக்கிழமை பௌத்த மத பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவர்களைக் கண்டு காட்டு பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குறித்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.