Date:

திருமணம் , ஜனாஸாக் கடமைகளுக்கு எவ்வித அனுமதியும் இல்லை

போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுடைய ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி மையவாடியில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குறித்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் –

புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் ஜமாஅத்தார்களுக்கு விடுக்கும் மிக முக்கியமான அறிவித்தலும் பிரகடனமும்.

03.12.2022 ஆம் திகதி புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் மாதாந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பின்வரும் விடயங்கள் பிரகடணப்படுத்தப்படுகின்றன.

கடந்த சில மாதங்களாக எமது பகுதியில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து காணப்படுவதுடன் அதன் விளைவுகளும் மிக மோசமாக காணப்படுவதனால் பின்வரும் விடயங்கள் – 2023 ஜனவரி 1ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளன.

👉🏻 போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் திருமணத்திற்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.

👉🏻 போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்யும் இல்லங்களில் நடைபெறும் ஜனாஸாக் கடமைகளுக்கு எமது பள்ளிவாசலினால் எவ்வித ஒத்துழைப்பும் வழங்கப்படமாட்டாது.

👉🏻 போதைப்பொருள் பயன்படுத்தும் மற்றும் வியாபாரம் செய்பவர்களுடைய ஜனாஸாக்கள் எமது மையவாடியில் அவர்களுக்காக பிரேத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்யப்படும்.

👉🏻 போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் பெயர் விபரங்கள் விளம்பரப் பலகை மூலம் காட்சிப்படுத்தப்படும்.

👉🏻 போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் விபரங்களை உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

👉🏻 போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வியாபாரிகளின் மஹல்லா உரிமம் இரத்துச் செய்யப்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வண்ணம்
நிர்வாகம்,
அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசல்,
புதிய காத்தான்குடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373