Date:

இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் நாடுமுழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளதுடன்,  இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் என கூறியுள்ளார்.

இதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தல், இன்று(15) வெளியிடப்படவுள்ளது.

அத்துடன், நேற்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானனோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

துஷித ஹல்லோலுவ பிணையில் விடுதலை

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித...

உலக தரவரிசையில் சரிந்த இலங்கை கடவுச்சீட்டு!

உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம்...

அதிகரிக்கும் பதற்றம் : காசா நகருக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் தொடங்கிய...

சம்பத் மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றில் சரணடைந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை...