Date:

வாய்த் தகராறு கொலையில் முடிந்தது : மாளிகாவத்தையில் சம்பவம்

நீண்ட நாள் தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த் தகராறு கொலையில் முடிந்துள்ள சம்பவமொன்று மாளிகாவத்தையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (06) மாலை கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் இரும்புக் குழாயால் தாக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு குழுவினரால் கை, கால்களால் தாக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் மாளிகாவத்தை பிரதேசத்தில், மஸ்ஜித் வீதியில் வசிக்கும் 44 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் 118 எனும் அவசர தொலைபேசி அழைப்பு மையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறிது காலமாக இடம்பெற்று வந்த பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இடம்பெற்ற தாக்குதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், தகராறுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...