மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட சபையை அமைக்க முன்மொழிந்தபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை நான் செவிமடுத்தேன், அதனைச் செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள நாங்கள் இதற்கு முழுமையாக ஆதரவளிப்போம் மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார்.