Date:

முதல் முறையாக சர்வதேச சந்தைக்கு இலங்கை புளிப்பு வாழைப்பழங்கள்

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள முதலாவது புளிப்பு வாழைப்பழம் நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளிப்பு வாழைப்பழத்தின் முதல் தொகுதி நாளை (26) துபாய்க்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் வெளிநாட்டு நிதியின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ராஜாங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்படும் புளிப்பு வாழை முதன்முறையாக வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு வொக்ஸ்ஹால் வீதியிலுள்ள Development Interplan Ceylon PVT LTD இல் இன்று (25)   வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எமது நாடு டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அந்நியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் விவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் இலங்கையின் பெயரை சர்வதேசப் புகழுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது என அமரவீர தெரிவித்தார். .

“நம் நாட்டில் எல்லாவற்றையும் விமர்சிப்பவர்கள் இருக்கும் இவ்வேளையில், சொந்த நாட்டு மண்ணில் விளைந்த புளிப்பு வாழையை இன்று சர்வதேச சந்தைக்கு அனுப்புவது எமக்குக் கிடைத்த வெற்றியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தொகுதியாக 12,500 கிலோ புளிப்பு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இனிமேல் வாரந்தோறும் சனிக்கிழமை துபாய் சந்தைக்கு இலங்கை புளிப்பு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாரத்திற்கு 10,000 டொலர் வருமானத்தை நாட்டுக்கு வழங்கியுள்ளது” என விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...

கம்பஹா தேவா விமான நிலையத்தில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி எனக்...