பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வரை நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விக்ரமசிங்க இன்று (23) ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவூட்டப்பட வேண்டும் என்றார்.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளதாகவும், அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலை விட நிவாரணத்தையே பொதுமக்கள் நாடுகின்றனர், மக்கள் அரசியலையும் தேர்தல்களையும் நிராகரித்துவிட்டு தற்போது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அக்கறை கொண்டுள்ளனர்.