Date:

நாட்டிற்கு டொலரை குவிப்பேன்; இல்லையேல் பதவியை இராஜினாமா செய்வேன்

மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் எதிர்வரும் வருடம் நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத் தருவதாகவும் இல்லையென்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள  ரத்தின கற்கள் நாட்டை விட்டு வெளியே போயுள்ளன என்றும் ஆனால் 170 மில்லியன் டொலர்கள் மட்டுமே நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து விவாதம் நடத்தி வருவதாகவும் 180 நாட்களுக்குள் நாட்டிற்கு டொலர் வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தனது முயற்சியால் அடுத்த ஆண்டு நாட்டிற்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத்தருவேன் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...