Date:

அடுத்த வாரத்திலிருந்து ரயில் நேர அட்டவணையில் முழுமையான மாற்றம் – ரயில்வே திணைக்களம்

அடுத்த வாரம் முதல் ரயில் சேவைகளின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சேவைகள் இறுதி இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக வேகத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான அட்டவணையின் பிரகாரம் ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அலுவலக ரயில்கள், கொழும்பு கோட்டை மற்றும் ஏனைய இடங்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் அலுவலக ஊழியர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, ரயில்களின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...