Date:

எரிபொருள் விலை குறித்து அமைச்சர் விசேட அறிவிப்பு

எரிபொருள் விலை திருத்தத்தை மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தொடர்பான பிரேரணையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (19) தெரிவித்தார்.

பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர,

“விலை சூத்திரத்தை கடந்த 15ம் திகதி சொன்னோம். அப்படியான சந்தர்ப்பத்தில் தாங்கள் பொருளாதார இழப்பை சமாளிக்க 14 ஆம் திகதி அல்லது 13ம் திகதி ஓடர்களை மேற்கொள்ளாமல் இருந்தீர்கள். அதனால் தற்போது மாதந்தோறும் அதனை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். திங்கட்கிழமை அமைச்சரவைக்கு வருகிறது. நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு, சில மணி நேரங்களுக்கு முன்பு இது அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பது குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும். வரும் மாதத்தில் இருந்து இந்தப் புதிய முறையை அமல்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்லும் முன்னாள் எம்.பிக்கள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற...

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு...

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...