Date:

கிய்ரன் பொலார்ட் ஓய்வு தொடர்பில் மலிங்க

தீவுகள் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கிய்ரன் பொலார்ட் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஐ.பி.எல். 2023 தக்கவைப்பு ஏலத்தில் இருந்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வீரர்கள் பட்டியலில் இருந்து விடுவித்ததைத்தொடர்ந்து, அவர் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்படவுள்ளார்.

அத்துடன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.எல்.ரி. லீக் அணியான மும்பை எமிரேட்ஸின் வீரராக அவர் தொடர்வார் என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தனது முகநூல் புத்தகத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“நீங்கள் எப்போதும் சிறந்த இருபதுக்கு 20 வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. துடுப்பாட்டம் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு முழுமையான அசுரன்.

நீங்கள் பும்பாய் இந்தியன் அணியிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள். நான் உங்களுடன் விளையாடுவதை மிகவும் ரசித்துள்ளேன்.

உங்கள் கிரிக்கெட் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு எனது நல்வாழ்த்துக்களும். உங்களின் வழிகாட்டுதலின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்டம் நிச்சயமாக வலுப்பெறும் என பதிவிட்டுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...