13 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 லீட்டர் டீசலை திருடிச் சென்ற இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திவுலபெலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கருங்கல் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான பணிமனை ஒன்றில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்கள் 18 மற்றும் 24 வயதுடைய ஹெபராவ பிரதேசத்தில் வசிப்பவர்களாவர்.