ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்றையதினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பல்வேறு அரசியல் தரப்பினரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடவியலாளர்கள் வினவியபோது ‘நல்லதொரு வரவு செலவு திட்டம். வேறு என்ன கூறுவது நல்ல வரவு செலவு திட்டம். அவ்வளவு தான்’ என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மற்றுமொரு ஊடகவியலாளர் ‘அப்படி என்றால் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தை விடவும் இது நல்லதென கூறுகின்றீர்களா என வினவியபோது “தேவையில்லாத கேள்விகளை அல்லவா கேட்கின்றீர்கள்” என கூறிவிட்டு வேறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுள்ளார்.