Date:

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

தற்காலிக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் தபால் மூலம் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி சுமார் 600,000 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்படவுள்ளதாகவும், இந்த விநியோகம் சில வாரங்களில் நிறைவடையும் என்றும் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதி அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டாததால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுநர் உரிம அட்டைக்குப் பதிலாக தற்காலிக காகித உரிம அட்டை வழங்கப்பட்டது.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்காக 500,000 அட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 500,000 அட்டைகள் எதிர்காலத்தில் நாட்டிற்கு வரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை அணிக்கு அபார வெற்றி

ஆசிய கிண்ண டி20 தொடரின் குழு B பிரிவில் இன்று (13)...

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...

கட்டாருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண்...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...