Date:

முட்டைகளை பதுக்கினால் சட்ட நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை

முட்டைகளை பதுக்கி வைக்கும் நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு இல்லை, செயற்கையாக முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் நாடகமாட முயற்சிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேடி நுகர்வோர் அதிகாரசபையினர் சோதனை நடத்தியதில், அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த சில வியாபாரிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, தற்போதைய சந்தை நிலவரத்தை கருத்திற் கொண்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வது சிக்கலாக உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் 55 ரூபாய் விலை கொடுத்தால் சந்தையில் முட்டை தட்டுப்பாடு தவிர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் முட்டை விலையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்காது என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...

வித்தியா கொலை குற்றவாளிகளின் மேன்முறையீடு

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல்...

ரணிலை பார்வையிடவில்லை“ பிரதமர் விளக்கம்

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திருமதி மைத்ரி விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னாள்...

முன்னாள் அமைச்சர்களின் பிணை கோரிக்கை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சார்பில்...