Date:

கடை ஒன்றுக்குள் புகுந்து பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கிய கொள்ளையர்கள்

கடை ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கடை உரிமையாளரான பெண்ணை மயக்கமடையும்வரை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த நகை மற்றும் கடையிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் மஹரகம – அரவ்வல – பன்னி்பிட்டிய வீதியில் உள்ள கடை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது. கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியின் இலக்கம் மற்றும் நிறம் குறித்து பொதுமக்கள் தகவல் வழங்கினர்.

இதனடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் “சுவசெரிய” அம்பியூலன்ஸ் மூலம் காயமடைந்த பெண்ணை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அரவ்வல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய இந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373