Date:

புத்தாண்டு தினத்தில் இருளில் மூழ்கும் மத வழிபாட்டுத்தலங்கள்!

விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணம் குறைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உந்துவப் போயா, நத்தார் சமய சடங்குகள் மற்றும் புத்தாண்டு தினத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் இருளில் முழ்கச் செய்யப்படும் என கலஹா சிறி சாந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) இடம்பெற்ற போயா தின சமய வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்த மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக மகா சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்திய போது, ​​பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கண்டிக்கு வந்து மல்வத்து அஸ்கிரிய உள்ளிட்ட மும்மதத் தலைவர்களையும், மதச்சார்பற்ற தலைவர்களையும் சந்தித்து மின்கட்டண சலுகை வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பிரிவெனாக்களுக்கு சூரிய சக்தி திட்டத்தை இரண்டு மாதங்களுக்குள் தயாரிப்பதாக தெரிவித்தார். ஆனால் அந்த வாக்குறுதியின்படி இதுவரை மின் கட்டணம் குறைக்கப்படவில்லை.

சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படவில்லை. இவர்கள் மிகவும் இரக்கமற்ற முறையில் முற்பிதாக்களையும், மதத் தலைவர்களையும் அமேற்றியுள்ளனர். இந்த மாயை தொடர அனுமதிக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...