Date:

அரிமா சங்கத்தினரால் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

வட கொழும்பு யுனைட்டெட் – District 306 பி 1 அரிமா சங்கத்தினரால் தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு 15 மட்டக்குழி புனித மேரிஸ் தேவாலயத்தில் வைத்து மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது…

இந்நிகழ்வானது அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் லயன் வைத்தியர் அனோமா விஜேசிங்க MJF அவர்களின் தலைமையில் ஏனைய அரிமா சங்க அங்கத்தினர்களின் பங்களிப்புடனும் இரண்டாவது பிரதி மாவட்ட ஆளுநர் லயன் டபிள்யூ ராஜித ரொட்ரிகோ அவர்களின் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தேவையுடையவர்களுக்காக நடாத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் இலவச நீரழிவு பரிசோதனை இரத்தப் பரிசோதனைகள் கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் லயன் வைத்தியர் அனோமா விஜேசிங்க MJF அவர்கள்…

எமது அரிமா சங்கம் மூலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரை பல்வேறுபட்ட சமூக சேவைகளை செய்து வருவதோடு இதுபோன்ற இலவச வைத்திய முகாம்கள் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் வைபவங்கள் போன்றவை இந்த மாதம் முழுவதும் செய்வதற்கு நாங்கள் உத்தேசித்து உள்ளோம் அந்த வகையில் இன்று நடைபெறுகின்ற இந்த நிகழ்வை தொடர்ந்து வத்தலை நீர் கொழும்பு போன்ற பிரதேசங்களிலும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்வதற்கு உத்தேசித்து உள்ளோம் ஆகவே தேவையுடையவர்கள் எங்களை தொடர்பு கொண்டு இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்…

மேலும் இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்திமையிட்டு கலந்து கொண்ட அனைவரும் மாவட்ட ஆளுநர் லயன் வைத்தியர் அனோமா விஜேசிங்க MJF அவர்களுக்கும் ஏனைய லயன் உறுப்பினர்களுக்கும் பாராட்டுதல்களைத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373