கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் ஆராய்ச்சிகட்டுவ, ஆனவிழுந்தாவ பெற்றோல் நிலையத்துக்கு அருகில் மோட்டர் சைக்கிள் மோதி காயமுற்ற யாசகரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த பையில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.
பணத்துக்கு மேலதிகமாக 5 வங்கி கணக்கு புத்தகங்களையும் ஆராய்ச்சிகட்டுவ பிரதேச இளைஞர்கள் மீட்டு, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மோதி காயமுற்ற யாசகர் எனக் கூறப்படும் நபர் சுமார் 65 வயதானவர் என்றும் அவரிடமிருந்து எடுத்த பணத்தை பொலிஸ் அதிகாரியின் முன்னால் எண்ணப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.