Date:

ரஷ்ய ஆஸ்பத்திரியில் ஒக்சிஜன் விநியோகத்தில் தடை; கொரோனா நோயாளிகள் பலி

ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான வடக்கு ஒசேஷியா அலனியாவின் தலைநகர் விளாடிகாவ்காசில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் ஒக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரிக்கு ஒக்சிஜன் விநியோகம் செய்ய பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஒக்சிஜன் குழாயில் நேற்று முன்தினம் மாலை திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகளுக்கான ஒக்சிஜன் விநழயோகம் தடைப்பட்டது.‌ இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு ஒக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வந்து நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்கத் தொடங்கினர். இதன் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்திய பட்ஜெட் 2026 – இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27...

FCIDயில் ஷிரந்தி; CIDயில் நாமல்! – ஒரே திகதியில் அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03...

யாழ்ப்பாணத்துக்கு வருகிறது உலகக் கிண்ணம்

ICC இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுற்றுப்பயணத்தின் ஓர் அங்கமாக, உலகக்...

நாளை முதல் கடும் தொழிற்சங்க போராட்டம்

தங்கள் அரசாங்கம் கோரிக்கைகளுக்கு தீர்வுகளை வழங்கத் தவறியதால், நாளை (02) முதல்...