Date:

ரஷ்ய ஆஸ்பத்திரியில் ஒக்சிஜன் விநியோகத்தில் தடை; கொரோனா நோயாளிகள் பலி

ரஷியாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமான வடக்கு ஒசேஷியா அலனியாவின் தலைநகர் விளாடிகாவ்காசில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலருக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் ஒக்சிஜன் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரிக்கு ஒக்சிஜன் விநியோகம் செய்ய பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஒக்சிஜன் குழாயில் நேற்று முன்தினம் மாலை திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நோயாளிகளுக்கான ஒக்சிஜன் விநழயோகம் தடைப்பட்டது.‌ இதனால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரி ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு ஒக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டு வந்து நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்கத் தொடங்கினர். இதன் மூலம் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளையே இலங்கையை…

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்,...

கண்டி வீதியில் இரண்டு பேருந்துகளும் லொறி ஒன்றும் மோதி இடம்பெற்ற பாரிய விபத்து..!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09)...

பதுளை பாடசாலைகளுக்கு பூட்டு!

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11...

இரண்டு வகையான நகர்வுப்பாதைகளைக் காட்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே  பொத்துவிலில் இருந்து  236 கி.மீ....