Date:

கொவிட் சரீரங்களை அடக்கம் செய்ய அம்பாறையில் புதிய இடம்

கொவிட்-19 சரீரங்களை அடக்கம் செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

3 ஏக்கர் பரப்பிலான குறித்த இடத்தில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான சரீரங்களை அடக்கம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட செயலாளரினால், குறித்த இடம், சரீரங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமானதென அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அது குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கொவிட்-19 சரீரங்கள் அடக்கம் செய்யப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதிகளில், மேலும் 500 சரீரங்கள் அளவில் அடக்கம் செய்யக்கூடிய நிலைமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொவிட்-19 சரீரங்களை அடக்கம் செய்வதற்காக இறக்காமம் பகுதியில் புதிய இடத்தை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...