Date:

தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று (31) கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது ரயில் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தையடுத்து தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடனடியாக ரயில் திணைக்களத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சடலத்தை மீட்டு கனகராயன்குளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலம் மீட்கப்பட்ட ஆண் ரயிலுடன் மோதி வித்துக்குள்ளானதால் மரணமடைந்ததாரா? அல்லது ஏற்கனவே தாக்கப்பட்டு ரயில் பாதையில் போடப்பட்டாரா? என்ற அடிப்படையில் கனரகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலம் சேட் இன்றி கறுப்புக் காற்சட்டை அணிந்தவாறு காணப்படுகின்றது.

குறித்த சடலம் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை – அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை - அபூர்வ ஆளுமை கொண்ட...

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள்...

வர்த்தக கவுன்ஸிலின் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் நேற்று காலை நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்...