Date:

கண்டியில் 3 பாடசாலை மாணவர்கள் கஞ்சாவுடன் கைது

கண்டியில் உள்ள மூன்று முன்னணி பாடசாலைகளின் மூன்று மாணவர்கள் கஞ்சாவுடன் பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பூங்காவில் கஞ்சாவை புகைக்க தயாரான போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் பகுதி நேர தனியார் வகுப்புகளில் கலந்துக்கொள்வதற்காக சென்று, கண்டி ஜோர்ஜ் ஈ. டி. சில்வா பூங்காவில் கஞ்சாவை புகைக்க தயாராகி கொண்டிருந்த போது பொலிஸ் அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது மாணவர்களிடம் இருந்து 3 ஆயிரம் மில்லி கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலைகளில் உயர் தரம் படிக்கும் மாணவர்கள் அவர்கள் கற்கும் பாடசாலைகளில் கீழ் வகுப்பு மாணவர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...

வெலிக்கடை சிறைச்சாலையில் சிக்கியது கையடக்கத் தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிடைத்த தகவல்...

“ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம்”

2014ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இராணுவப் புலனாய்வுத்...

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா!

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதல்களைத் தீர்த்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த...