Date:

160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கைக்கு அத்தியாவசியமான 383 வகையான மருந்துகளில் தற்போது சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டி.ஆர்.கே. ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதய நோயாளிகளுக்கான மருந்துகள் அவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.

383 மருந்துகளில் சுமார் 160 மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. இந்த நேரத்தில் இந்த மருந்துகளை எமக்கு இருந்தால் நல்லது.

இதய பிரச்சனைகளுக்கு நாக்கிற்கு அடியில் வைக்க மாத்திரை ஒன்று உள்ளது. அடுத்த 2 வாரங்களுக்குள் ஒரு தொகுதி மாத்திரைகளையாவது கொண்டு வர வேண்டும்.

மாரடைப்புக்குக் கொடுக்கப்படும் இன்னொரு மருந்து இருக்கிறது, குறித்த மருந்தும் தற்போது குறைவடைந்து கொண்டு வருகிறது.இன்னொரு தடுப்பூசி இருக்கிறது. இந்த 3 மருந்துகளையும் விரைவில் கொண்டு வர வேண்டும்.- என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...