Date:

இரண்டு வயது நிரம்பிய குழந்தைகள் உள்ள தாய்மார் வெளிநாடு செல்வது பாரிய குற்றம்- கீதா குமாரசிங்க

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடு செல்வதை தடை செய்யும் வகையிலான சட்டத்தை மீள கொண்டு வருவதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள தயாராகி வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிக்கின்றார்.

தற்போது இரண்டு வயது நிறைந்த குழந்தைகளின் தாய்மாருக்கு வெளிநாடு செல்ல அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதியானது, பிரச்சினையானது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதனால், குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இரண்டு வயது நிரம்பிய குழந்தைகள் உள்ள தாய்மார் வெளிநாடு செல்வது பாரிய குற்றம் எனவும் அவர் கூறுகின்றார்.

குழந்தைக்கு ஐந்து வயது நிரம்பும் வரை தாய்மார்கள், குழந்தைகளுடன் இருப்பது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

குழந்தைகளை, குடும்பத்தாரே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதனாலேயே, ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...