Date:

டொலர்கள் வேண்டுமாயின் களியாட்ட விடுதிகள் வேண்டும்- டயனா

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சுக்கான பொறுப்புக்களை தனியாக வழங்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நேற்றைய தினம் (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டுக்கு சரியான முறையில் எதிர்பார்த்த சேவையை செய்ய வேண்டுமாயின் எனக்கு நிறுவனங்களை ஒதுக்கி உரிய பொறுப்புக்களை வழங்க வேண்டியது அவசியம். ஒரு நபரோ அல்லது இரண்டு நபரோ அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருந்தால், திறமையாக பணியாற்றும் வாய்ப்பு இல்லாமல் போகும்.

அப்படி நடந்தால், வைக்கோலை நாய் உண்பதுமில்லை, உண்ணும் மாட்டுக்கும் கொடுப்பதில்லை என்ற நிலைமையே ஏற்படும். இதன் காரணமாகவே அதிகாரங்களை வழங்குமாறு நான் அதிபர் ரணிலிடம் கோரினேன் எனவும் டயனா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்குதல் மற்றும் இரவு பொருளாதாரம் தொடர்பிலும் டயனா கமகே மீண்டும் கருத்து வெளியிட்டுள்ளார்.பல நாடுகளில் இரவு பொருளாதாரம் 70 வீதம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் டொலர்களை செலவிட வேண்டுமாயின் அவர்களுக்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் இருக்க வேண்டும். சாப்பிடவும் குடிக்கவும் நடனமாடவும் தேவையான சூழல் இருக்க வேண்டும். இரவு 10 மணியுடன் அனைத்தையும் முடிவிடுவது சரியாக இருக்காது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ் உடன்படிக்கை

2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக இலங்கை சவூதி அரேபியாவுடன் ஹஜ்...

Breaking தலாவ பேருந்து விபத்தில் ஐவர் பலி – 25 பேர் காயம்

அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்...

செட்டியார் தெருவில் நகை கடையை உடைத்து கொள்ளையிட்டவர் கைது

புறக்கோட்டை, செட்டியார் தெரு பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண...

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...