முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை, மீண்டும் பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் அளவில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கு பிரதமர் பதவியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அதனை நிராகரித்திருந்தார்.