Date:

ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்வது பற்றிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் யாது என பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் பெரேரா கேட்ட வாய்மொழி மூலமான வினாவுக்கு விடையளிக்கும் போதே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அதற்கிணங்க போட்டிப் பரீட்சை ஊடாக ஆசிரியர் சேவைக்கு ஆசிரியர்களை உள்வாங்குவதற்கு வாய்ப்புக் கிடைப்பதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிர்வாண பகடி: மாணவன் மரணம்

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம்...

ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு...

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும்...

எதிர்க்கட்சித் தலைவரின் மே தின வாழ்த்துச் செய்தி

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, கட்சி எதிர்க்கட்சி வேறுபாடின்றி நாம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373