Date:

திரவ மருந்துகளால் மேலும் 100 குழந்தைகள் மரணம்!! அதிர்ச்சி செய்தி

இந்தோனேசியாவில் சிரப் மற்றும் திரவ மருந்துகளால் சுமார் 100 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் சிரப் மற்றும் திரவ மருந்துகள் விற்பனையை தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காம்பியாவில் 70 குழந்தைகள் இருமல் சிரப் வகையினால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய அதிகாரிகள் குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், சிரப் ஒன்றில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் இரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் 99 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த மருந்து உள்ளூர் தயாரிப்பா அல்லது வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தோனேசிய அதிகாரிகள் 200 குழந்தைகளை பரிசோதித்ததில் அவர்களுக்கு பல்வேறு சிறுநீரக கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் 05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...