Date:

22ஆம் திருத்தச் சட்டமூலம் குறித்து இன்றும் நாளையும் விவாதம்!

22ஆம் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நடத்தப்படவுள்ளது.

அத்துடன் நாளைய தினம் விவாதம் முடிவுக்கு வந்த பின்னர் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இன்று விவாதிக்கப்படவுள்ள 22ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22ஆம் திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

22ஆம் திருத்த சட்டமூலம் தொர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைக்கும் குறித்த திருத்த சட்டமூலத்துக்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 22ஆம் திருத்த சட்டமூலத்தின் சில சரத்துகள் திருத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாஹர காரியவசம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விபத்தில் சிக்கிய அசோக ரன்வலவின் மனைவி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...

ஈரானின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா கடும் எச்சரிக்கை | அனைத்து விருப்பங்களும் தயார்!

ஈரானின்  அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் | கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டம்..!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று...