Date:

பாராளுமன்றம் கலைக்கப்படுமா? – ஜனாதிபதி வழங்கிய பதில்

தற்போதைய பாராளுமன்றம் உரிய காலத்திற்கு முன்பாக கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

பாராளுமன்றம் இரண்டரை வருடங்களில் கலைக்கப்படுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு தமது கட்சியிலுள்ள பெரும்பாலானோர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதனால், 22 திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள அனைவரினதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

எனினும், 22வது திருத்தமானது காலத்தின் தேவை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு அனைவரது ஆதரவும் தேவை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...