Date:

பாராளுமன்றம் கலைக்கப்படுமா? – ஜனாதிபதி வழங்கிய பதில்

தற்போதைய பாராளுமன்றம் உரிய காலத்திற்கு முன்பாக கலைக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

பாராளுமன்றம் இரண்டரை வருடங்களில் கலைக்கப்படுமா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு தமது கட்சியிலுள்ள பெரும்பாலானோர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதனால், 22 திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள அனைவரினதும் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.

எனினும், 22வது திருத்தமானது காலத்தின் தேவை என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதனை நிறைவேற்றிக் கொள்வதற்கு அனைவரது ஆதரவும் தேவை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு!

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,...

BREAKING அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் நாம் ஈடுபடவே இல்லை! – ஈரானிய அரச ஊடகங்கள்

“மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக...

ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென ஒத்திவைத்த டிரம்ப்! ;தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை

ஈரானுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதன் காரணமாக அந்நாட்டின் மின்...

பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...