Date:

எரிபொருள் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று (ஒக்.18) பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ{மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பதிவு செய்யப்பட்ட தரவுகளை மீள பதிவேற்றம் செய்து, அதனூடாக முச்சக்கரவண்டிகளுக்கு மேலதிக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

தரவுகளை பதிவேற்றம் செய்வதற்கு ஓரிரு வாரங்கள் எடுக்கும் என கூறிய அவர், தரவுகள் பதிவேற்றப்பட்டவுடன் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373