Date:

போதையின் உச்சம்: யாழில் மூதாட்டி மீது பாலியல் வன்புணர்வு

உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 40 வயதுடைய ஒருவரால் மனநலம் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்ணொருவர் கடந்த 9ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை பருத்தித்துறை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்வதற்கான அக்கறையும் காண்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.

சந்தேகநபர் 40 வயதுடையவர். அதேயிடத்தைச் சேர்ந்தவர். கடந்த 9 ஆம் திகதி சிறையிலிருந்து சந்தேகநபர் விடுதலையானார். அவர் மீது கொலை மற்றும் உயிர்கொல்லி போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் என்பன உள்ளன.

கடந்த 9 ஆம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு முன்னால் இரவு வேளை சந்தேகநபர் ஹோர்ன்’ அடித்துள்ளார்.

பெண் வெளியே வந்ததும் அவரது வீட்டு வாசலில் வைத்தே குறித்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி யுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது 70 வயதான சகோதரி அங்கு வந்தபோது அவர் மீது சந்தேக நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

காயமடைந்த இரு பெண்களும் பருத் தித்துறை ஆதார மருத்துவமனையில் மறுநாள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடுதிரும்பியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று 9 நாள்கள் கடந்துள்ள நிலையிலும் சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் இன்னும் கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 பிள்ளைகள் உள்ள னர். அவர்கள் வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...