யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த குறித்த குழந்தைக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டதால் கடந்த 14 ம் திகதி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்