Date:

குழந்தைகளுடன் வீதிக்கு இறங்க தயாராகும் போராட்டக்காரர்கள்

எவ்வாறான தடைகள் வந்தாலும் எதிர்கால சந்ததியின் நலன் கருதி தாம் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராட தயார் என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் நேற்று (ஒக்.16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சமூக செயற்பாட்டாளர் ரஷ்மினி விஹங்கா இதனை குறிப்பிட்டார்.

கொழும்பில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது தனது கணவரின் கையில் குழந்தை இருக்கின்றதை அவதானித்ததன் பின்னரே, பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

யார் என்ன கூறினாலும் எதிர்வரும் காலங்களில் தாம் தமது குழந்தைகளுடன், வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சோறும் பருப்பும் கூட சாப்பிடுவதற்கு வழி இல்லை என கூறிய அவர், குழந்தைகளுக்கு பாலை கொடுப்பதற்குக் கூட முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்தார்.

இதுவரை காலம் தாம் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராடவில்லை எனவும், எதிர்வரும் காலங்களில் குழந்தைகளுடன் வீதிக்கு இறங்கி போராட தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...