Date:

போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோரை தாக்கிய இளைஞர்

போதையிலிருந்து மகனை மீட்க முயன்ற பெற்றோர், சகோதரி ஆகியோரை மகனுடன் இருந்த இளைஞர் தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் கொடிகாமம் பாலாவி வடக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

கொடிகாமம் – பாலாவி வடக்குப் பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர். இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீட்டுக்கு வராததால் தேடிச் சென்றுள்ளனர்.

பாலாவி வடக்குப் பகுதியில் உள்ள பற்றைக்குள் தமது மகன் இன்னொரு இளை ஞருடன் கசிப்பு அருந்தியதைக் கண்டனர். அதைத் தடுத்து மகனை வீட்டுக்கு அழைத்து வர முற்பட்டவேளை மகனுடன் இருந்த இளைஞர்,பெற்றோர்,சகோதரி ஆகியோரையும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர், மகன், மகள் ஆகியோர் காயமடைந்தனர். அத்துடன் தாக்குதலில் ஈடுபட்டவேளை தாக்குதல் மேற்கொண்ட கெற்பேலி மேற்கைச் சேர்ந்த இளைஞரும் காயமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதில் 42 வயதான தந்தை, 21 வயதான மகன் மற்றும் 25 வயதான இளைஞர் ஆகி யோர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மதுபான விலை அதிகரிப்பின் பின்னர் கெற்பேலி, பாலாவிப் பகுதியிலுள்ள பற்றைக் ளில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதெனவும் உரிய தரப்பினருக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...